பல்கலைக்கழக வேந்தர்களை தமிழக அரசே அறிவிக்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் நேற்று சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்று அதற்கான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இணை வேந்தராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியனும் பதவி வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வேந்தராக இதுவரை கவர்னர் இருந்து வரும் நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்காக நிறைவவேற்றப்பட்ட மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் துணை வேந்தர், மற்ற பதிவாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் உருவாக்கப்பட்ட அதற்கான அதிகாரிகள் வரும் காலங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தமிழக சட்டசபையின், சட்டத்துறை இந்த மசோதாக்களின் கோப்புகளை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கும். கவர்னர் இதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கவர்னர் மாளிகையில் 15க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், இப்போது வீட்டு வசதி மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா ஆகிய 2 மசோக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Related Posts
🔬தமிழ்நாட்டில் ரூ.250 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் VLSI மையம்: AI எதிர்காலத்திற்கான அடித்தளம்!
“தமிழ்நாட்டில் AI வளர்ச்சி வேகத்தில் பின்தங்கியிருக்கிறதா?”- ஓர் அலசல்!
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதல் மற்றும் வளர்ச்சி!