September 11, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

குட்கா, பான்மசாலா விற்ற கடைகளின் வணிக உரிமம் ரத்து- பழனி நகராட்சி அதிரடி!

ரசினால் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்கும் குட்கா, பான்மசாலா விற்ற கடைகளுக்கு பழனி நகரில் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டது

பழனி நகர் பகுதிகளில் அரசினால் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்கக்கூடிய குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், கணேஷ் புகையிலை, Cool lip போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளில் காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறை, பழனி நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் மேற்படி கடைகளுக்களின் வணிக உரிமத்தை ரத்து செய்யப்பட்டு நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டது. ஆகையால் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்ட கடையில் திறந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை.

எனவே கடையை அடைத்துள்ளனர். கடை நடத்துவோர் இனிமேல் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க மாட்டேன் என்ற உறுதியுடன் காவல்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று மீண்டும் வணிக உரிமம் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் அறிவிப்பு கொடுத்துள்ளனர்.எனவே கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையின் அபராத தொகையை செலுத்திய பின்பு, பழனி நகராட்சியில் வணிக உரிமம் பெற்றபின்புதான் கடையை திறக்க முடியும்.

மேலும் இதுபோன்று சட்டவிரோதமான அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா
விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மற்றும் கடைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை, பழனி நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
error: Content is protected !!